முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

பழனியில் குற்றங்களை தடுக்க, முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பழனி கோயில் நிர்வாகம் சார்பில், அடிவாரம் மற்றும் கிரிவீதி பகுதிகளிலும், காவல்துறை சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்கவும், புதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version