திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த 5 பேரும், கோவை மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பு காரணமாக சேலம் மத்திய சிறைக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு குற்றவாளிகளின் வீடுகள், அவர்களை சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருநாவுகரசின் பண்னை வீடு உள்ளிட்ட பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் சிபிஐ அதிகாரிகள் மாக்கினாம்பட்டி பகுதியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

Exit mobile version