ஆணையர்,ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினரே கடத்தல் குற்றவாளிகளா??கண்டுபிடிக்குமா?? CBCID!!

தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை பறிக்க முயன்ற புகாரில், 6 போலீசார் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை கடத்தி பண்ணை வீட்டில் கட்டி வைத்து சொத்துக்களை அபகரித்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 6 மாதங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 6 போலீசார் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. அனைவரையும் கைதுசெய்து விசாரணையை தீவிரப்படுத்தவும், சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Exit mobile version