காரை சேதப்படுத்தியது தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா மீது வழக்கு பதிவு!

மாதவரம் பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும், நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிற்கும் இடையே கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமது காரை நித்யா சேதப்படுத்தியதாக மணி, மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் நித்யா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். ஏற்கனவே கணவன் மனைவி பிரச்சனையில் தவித்த நித்யா, தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Exit mobile version