அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: அஹிம்சா சோஷலிச கட்சி வேட்பாளர் காந்தி வேடத்தில் வேட்பு மனுத்தாக்கல்

4 தொகுதிகளுக்கும் வேட்புமனு தொடங்கிய நிலையில் அரவக்குறிச்சியில் காந்தி வேடத்தில் வந்த ரமேஷ் என்பவர், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் மே 19 ம் தேதி இந்த 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தலைமையிலான அதிகாரிகள் வேட்பு மனுவை பெறுவதற்கு காலை 11 மணி முதல் தயார் நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், அகிம்சா சோஷலிச கட்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி வேடத்தில் வந்த அவர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Exit mobile version