நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்காததை கண்டித்து இந்தியா முழுவதும் நாளை மறுநாள் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்

காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்த பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாள்ர் விஜய் ஆரோக்கியராஜ், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை தனியார் தொலைத்தொடர்பு நிருவனங்களை நோக்கி நகர்த்த மத்திய அரசு சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.

பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version