BSNL, MTNL நிறுவனங்கள் விருப்ப ஓய்வு குறித்து தங்கள் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு

பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள், விருப்ப ஓய்வு திட்டம் குறித்து, தங்கள் ஊழியர்களிடம் பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகியவை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத வகையில் நிதி நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, அதன் மூலம், சம்பள செலவை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Exit mobile version