திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரமோற்சவ விழா

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் பிரமோற்சவ விழாவில் மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

திருமலை திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கோவிந்தராஜ சுவாமி, பிரம்மோற்சவ கருடன் உருவம் வரையப்பட்ட கொடி, சக்கரத்தாழ்வார், பரிவார தேவதைகளுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தார். இரவு சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம், பக்தி கீர்த்தனைகள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version