News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

Web Team by Web Team
February 27, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்
Share on FacebookShare on Twitter

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் நடந்த இந்த பொது கூட்டத்தில், கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமையை நினைவு கூர்ந்தனர். இதனையடுத்து, ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உணவுத்துறைக்கென 6 ஆயிரத்து 500 கோடியை ஒதுக்கீடு செய்து விலையில்லா அரிசி திட்டத்தை அதிமுக அரசு மீண்டும் உறுதி செய்துள்ளதாக அமைச்சர் காமராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு,திருவாரூர் அருகே மாவூரில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நிதிநிலை அறிக்கையில் உணவுத்துறைக்கு 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், அப்போது பேசிய அவர், 1998 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அமைச்சராக  இருந்தபோது தான் கோவையில் இஸ்லாமிய சகோதரர்கள் நடத்திவந்த  ஜவுளிக்கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தான் இஸ்லாமிய சகோதரர்கள் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் சீர்காழியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று, பொதுமக்களுக்கு, மரக்கன்றுகளை வழங்கினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழக மக்களை குழப்பதிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அற்ப புத்தியோடு திமுக செயல்பட்டு வருவதாக சாடினார். முன்னதாக அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்த 20 குழந்தைகளுக்கு அமைச்சர் தங்க மோதிரங்களை அணிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அதிமுக ஆட்சி நீடிக்குமா என்று தொடர்ந்து பேசி வந்த மு.க. ஸ்டாலின், களைத்து விட்டதாகவும், அதிமுகவுக்கு பயந்து, பிரசாந்த் கிஷோர் என்பவரிடம் திமுக தேர்தல் பணிகளை ஒப்படைத்துள்ளதாகவும் கூறினார்.

Tags: BirthdayChennaiChief Minister Jayalalithaa
Previous Post

பெண் வளர்ச்சிக்காக சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் ஜெயலலிதா தான்: அமைச்சர் சி.வி.சண்முகம்

Next Post

பிரகாஷ்ராஜ் மீதான ரூ. 5 கோடி காசோலை மோசடி வழக்கு: ஆஜராக சம்மன்

Related Posts

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
அரசியல்

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
அரசியல்

முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!

September 17, 2023
பகுத்து அறிபவர் அனைவரும் பெரியார்! பகுத்தறிவு பகலவன் “தந்தை பெரியார்” குறித்து ஒரு சிறப்புப் பார்வை!
அரசியல்

பகுத்து அறிபவர் அனைவரும் பெரியார்! பகுத்தறிவு பகலவன் “தந்தை பெரியார்” குறித்து ஒரு சிறப்புப் பார்வை!

September 17, 2023
“கப்பலோட்டிய தமிழருக்கு புரட்சித் தமிழர் புகழாரம்”
அரசியல்

“கப்பலோட்டிய தமிழருக்கு புரட்சித் தமிழர் புகழாரம்”

September 5, 2023
பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!
தமிழ்நாடு

பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!

August 31, 2023
த்ரிஜ் த்ரிஜ் ! திமுக கேங் வார்! வட்டச்செயலாளர் VS கவுன்சிலர்! என்ன நடந்தது?
அரசியல்

த்ரிஜ் த்ரிஜ் ! திமுக கேங் வார்! வட்டச்செயலாளர் VS கவுன்சிலர்! என்ன நடந்தது?

July 27, 2023
Next Post
பிரகாஷ்ராஜ் மீதான ரூ. 5 கோடி காசோலை மோசடி வழக்கு: ஆஜராக சம்மன்

பிரகாஷ்ராஜ் மீதான ரூ. 5 கோடி காசோலை மோசடி வழக்கு: ஆஜராக சம்மன்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version