News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான்! – அமைச்சர் கே.பி.அன்பழகன்

Web Team by Web Team
September 7, 2020
in Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான்! – அமைச்சர் கே.பி.அன்பழகன்
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பின்னர், தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு விரைந்து வழங்க உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை 49 சதவிகிதமாக உள்ளதாகவும், நிகழாண்டில் 50 சதவிகித இலக்கை அடைந்துவிடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய கல்லூரிகள் திறப்பு, புதிய பாடத்திட்டங்கள் மூலம் வரும் 2035 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை 65 சதவிகிதத்தை எட்டிவிடும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்.

தேசிய அளவில் ஆசிரியர், மாணவர் விகிதாசாரம் 26 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என உள்ள நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கல்வி கொள்கையின்படி, பி.எட்., பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக மாற்றியுள்ளதை வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அன்பழகன், இதன் மூலம் மாணவர்கள் விரைவில் படிப்பை முடித்து ஆசிரியர் பணிக்கு செல்ல வழி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 587 கல்லூரிகளில் 53 கல்லூரிகளுக்கு மட்டுமே தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தொடர அனுமதிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மாநில மொழிகளில் கல்வி பயில வாய்ப்பு வழங்கவேண்டும் என தேசிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

Tags: Minister K. P. Anbalagannewsjtamil nadu
Previous Post

தேசியக்கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன – மோடி!

Next Post

தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு!

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு!

தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version