போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த ஷாக் : வீட்டை விட்டு வெளியேறுகிறாரா கவின் ?

இன்று பிக்பாஸ் வீட்டில் 94வது நாள்.ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர்.100 நாட்களை விரைவில் போட்டியாளர்கள் நெருங்க உள்ள நிலையில், அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்கும் கடுமையாகி கொண்டே வருகிறது.ஆனால் அவர்களை உற்சாகப்படுத்த பிக்பாஸ் 2 போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா நேற்று வீட்டிற்குள் வந்தனர்.

ஷெரினுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுப்பதாக கூறி ஒரு கடிதம் எழுத சொன்னார்கள்.பின்பு அந்த கடிதத்தை பிக்பாஸ் எழுதியவருக்கு கொடுங்கள் என கூறினார்.அதற்கு ஷெரினோ ’அதில் ரகசியமான விஷயங்களை எழுதியுள்ளேன் அதை என்னால் கொடுக்கமுடியாது’ எனக் கூறி கடிதத்தை கிழித்துவிட்டார்.

இன்றைய முதல் ப்ரோமோவில் தர்ஷனிடம் ‘உனக்கு கொடுக்குனும்னா நானே கொடுத்து இருப்பேன்ல,நீ ஏன் படிச்ச’என ஷெரின் கேட்கிறார்.பின்பு வீட்டில் உள்ள அனைவரும் இந்த காதல் கடிதத்தை பற்றி பேசி கிண்டல் செய்கின்றனர்.

இரண்டாவது ப்ரோமோவில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு ஜனனி மற்றும் ரித்விகா வருகின்றனர்.ஜனனி வீட்டில் உள்ள அனைவரும் தனித்தன்மையோடு இருக்கிறீர்கள் என கூற, தர்ஷனோ அத என்னான்னு சொல்லிடுங்களேன் என கேட்க, ஜனனி போட்டியாளர்களை பற்றி கூறுகின்றார்.

பின்பு, மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எதிர்பாராத டாஸ்க்கை கொடுக்கின்றார்.பிக்பாஸ் போட்டி வெல்பவர்களுக்கு 50 லட்சம் பரிசாக வழங்கப்படும்.ஆனால் இன்றே 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற உங்களுக்கு ஒரு வாய்ப்பு என பிக்பாஸ் கூறுகிறார்.அனைவரும் யோசித்தப்படி இருக்கையில் கவின் மட்டும் ’நான் செல்கிறேன்’ என கூறி விட்டு எழுந்து நிற்கிறார்.சாண்டியோ, லூசு மாதிரி பண்ணாத என திட்டுகிறார்.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு கவின் வெளியேறுவாரா, மாட்டாரா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

Exit mobile version