லட்டுவினால் ஏற்பட்ட சண்டை : விவாகரத்து கேட்ட கணவன்

மனைவி தினமும் 4 லட்டு மட்டுமே சாப்பிட கொடுத்ததால், ஆத்திரமடைந்த கணவன் விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.இந்த சம்பவமானது அப்பகுதில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த கணவன்-மனைவி தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், கணவனுக்கு உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் போயிருக்கிறது.கணவனின் உடல்நிலை பற்றி ஜோதிடரிடம் மனைவி கேட்டதற்கு,ஜோதிடர் ஒரு வைத்தியம் சொல்லியுள்ளார்.அந்த வைத்தியத்தை தொடர்ந்து செய்ததால் கணவன் வெறுத்துபோகி விவாகரத்துக்கு கேட்டுள்ளார்.

அதாவது தினமும் காலையிலும், மாலையிலும் 4 லட்டு மட்டுமே சாப்பிட கொடுத்துள்ளார்.வேற எதுவுமே சாப்பிட கொடுக்காத காரணத்தால் கடுப்பாகி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த சிரிக்க வைக்கும் பிரச்சனையை கேட்ட குடும்பநல ஆலோசகர் முதல்கட்டமாக இருவரையும் கவுன்சிலிங் மையத்துக்கு அனுப்பியுள்ளார்.

Exit mobile version