காவிரியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்! – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை!

கர்நாடக மாநிலத்தின் சட்டபேரவையில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டியத் தீருவோம் என்று கூறியுள்ளார். இது தமிழக விவாயிகளுக்கு முக்கியமாக டெல்டா விவசாயிகளுக்கு இந்த செய்தி மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கர்நாடக அரசின் தனிப்பட்ட நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது. சென்ற வருட கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் தாக்கலில் மேகதாது அணை கட்டுவதற்கு 9000 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்டு அதற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டதாக கூறியிருந்தார்கள். தற்போது இன்றைக்கு மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சொல்லியிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Exit mobile version