வாடிக்கையாளர் பணம் திருடு போனால் வங்கி தான் பொறுப்பு

வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால், வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என்று கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து திருட்டுத்தனமாக 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது. பணத்தை திருப்பித்தர உத்தரவிடக்கோரி சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து சம்மந்தப்பட்ட வங்கி, கேரள உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவே வங்கிகள் உள்ளதாகவும், சட்டவிரோதமாக பணம் எடுக்கப்பட்டால் வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Exit mobile version