சூறைகாற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சேதம்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பதினெட்டான்குடி, கொட்டக்குடி, மில்கேட், கொட்டாம்பட்டி உள்ளிட்ட இடங்களில், சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version