வங்கி மோசடியில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க விழிப்புணர்வு

செல்போனில் வங்கிகளிலிருந்து பேசுவதாக யார் தொடர்பு கொண்டாலும்,  ஏடிஎம் ரகசிய எண்ணைத் தெரிவிக்க வேண்டாம் என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட வாய்க்குப் பூட்டு என்னும் விழிப்புணர்வு குறுந்தகட்டை வெளியிட்ட காவல் ஆணையர் விஸ்வநாதன், விழாவில் பேசினார். அப்போது, வங்கிகளின் அதிகாரிகள் போல் யார் பேசினாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், வங்கிப் பணம் மோசடி உட்பட ஆன்லைன் குற்றங்களைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, வங்கி மோசடியில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருப்பது தொடர்பாக, “வாய்க்குப் பூட்டு” என்னும் விழிப்புணர்வு குறும்படத்தை சென்னை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதில் பணியில் இருக்கும் காவல்துறையினரே விழிப்புணர்வுக்காக நடித்துள்ளனர்.

Exit mobile version