பேரறிவாளன் விவகாரத்தில் சட்ட சிக்கல் இருப்பதாக கூறுவது நியாயமற்றது: அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, அவரின் தாயார் அற்புதம்மாள் ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை, தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும், ஆளுநர் சட்ட சிக்கல் இருப்பதாக காரணம் கூறி அவர்களை விடுதலை செய்யாமல் இருப்பது நியாயமற்றது என தெரிவித்தார்.

Exit mobile version