குற்றாலத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் சுமார் 1000 பேர் மீது வழக்கு

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டிய நிலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குற்றாலத்தை பொருத்தவரை ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த மூன்று மாதங்களும் அருவிகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள்.இதனிடையே வாகனங்களின் வருபவர்கள் மது அருந்திவிட்டு வருவதாகவும், பொது இடங்களில் கார்களை நிறுத்திவிட்டு மது அருந்துவதாகவும் வந்த புகார்கள் பெறப்பட்டன.

இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளர். இந்த வாகன சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version