மதுரையில் மக்களவை தேர்தலை ஒத்தி வைக்கக்கோரி முறையீடு

மதுரையில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அதே நாளில் மதுரையில் சித்திரை தேர்த் திருவிழா நடைபெற உள்ளதால் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார்.

இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை சித்தரை திருவிழா குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ உத்தரவிட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version