லண்டனில் சொத்துக்கள் வாங்கிய வழக்கு:முன்ஜாமீன் கோரி ராபர்ட் வதேரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு

லண்டனில் சொத்துக்கள் வாங்கியதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனுத் தாக்கல் செய்துள்ளார்.

லண்டனில் சுமார் 2 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய சொத்துக்கள் வாங்கிய விவகாரத்தில் கோடிக் கணக்கான பணம் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் மனோஜ் அரோராவை கைது செய்ய பிப்ரவரி 6ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தன்மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த முன்ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

Exit mobile version