வடசென்னை படக்குழுவினரின் அடுத்த படம் அறிவிப்பு !

விசாரணை திரைப்படத்தின் மூலம் ஒரு காவல் நிலையத்தில் எவ்வாறு விசாரணை நடைபெறும் என படம் பிடித்து நம் கண்முன் காட்டிய இயக்குநர் வெற்றிமாறன்…

தற்போது வடசென்னை திரைப்படத்தின் மூலம் சிறைச்சாலையில் கைதிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை காட்சிப்படுத்தி, பலரது பாராட்டை பெற்றுள்ளார்.

இந்தநிலையில் பூமணி எழுதிய வெக்கை என்னும் நாவலை தழுவி தனது அடுத்த படத்தை எடுக்க இருக்கிறார் வெற்றிமாறன். நாவல் பிரியர்களிடையே, மிகவும் பிரலமான நாவல் இது.

கரிசல் காட்டு பூமியையும், அங்குள்ள சாதி ஒடுக்கு முறைகள், அன்றைய அரசியல் அமைப்புகள் பற்றி கூறும் கதைதான் வெக்கை. விசாரணையையும், கைதிகளின் வாழ்க்கை முறையையும் படம்பிடித்த வெற்றிமாறன், அடுத்ததாக, அரசியல் களம் காண இருக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகளை, சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். அரசியலை வைத்து, ரசிகர்களை அசத்திவிடுவார் என்று நம்புவோம்.

Exit mobile version