ஜெகத்ரட்சகன் இலங்கையில் முதலீடு செய்தது குறித்து ஸ்டாலின் பதிலளிப்பாரா?: அன்புமணி

இலங்கை தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஸ்டாலின், தனது வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்து என்ன பதில் தரபோகிறார் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துக்கூறி பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனி நபர் விமர்சனத்தையும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் என கூறிக் கொள்ளும் திமுக கூட்டணியைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன், இலங்கையில் 26,000 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்து என்ன பதில் தரபோகிறார் என்று கேள்வி எழுப்பினார். 

Exit mobile version