தேசிய காவலர் நினைவிடத்தில் அமித் ஷா மரியாதை

டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா, நேற்றைய தினம் தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்திற்கு சென்ற அமித் ஷா, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Exit mobile version