கனிமொழி, ஆ.ராசா போன்ற ஊழல்வாதிகளை திமுக கூட்டணி களமிறக்கியுள்ளது: அமித்ஷா

கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட ஊழல்வாதிகளை திமுக கூட்டணி களமிறக்கியுள்ளதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி சங்கரப்பேரியில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

பிரமாண்ட கூட்டத்தில் உரை நிகழ்த்திய பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட ஊழல்வாதிகளை திமுக கூட்டணி களமிறக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

அமித்ஷா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யவும், ஆலையை திறக்கவும் காரணமாக இருந்த திமுக தற்போது நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் விரைவில் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்றும், ஏழைகளுக்கு கொடுப்பதை நிறுத்தும் ஒரே கட்சி திமுக என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.

மத்தியில் வலிமையான ஆட்சித் தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version