அரசுப் பள்ளியை பராமரித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள்

புவனகிரி அருகே முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து அரசுப் பள்ளியில் பராமரிப்பு பணிகளை நடத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இதனை கிராம மக்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து மேம்படுத்த முடிவெடுத்தனர். இதனையடுத்து பள்ளியின் மைதானத்தை தண்ணீர் தேங்காதவாறு டிராக்டர்களை பயன்படுத்தி சமப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். மேலும் பள்ளி மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி சுவர்கள் முழுவதும் கண்கவர் வண்ண ஓவியங்களையும் வரைந்தும் அழகு சேர்த்துள்ளனர். பள்ளியின் வளர்ச்சிக்காக மேலும் சில மேம்பாட்டு பணிகளை செய்ய இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version