புதுக்கோட்டையில் சுழற்சிமுறையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: ஆட்சியர் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறை மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தேர்தலை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுவதால் சுழற்சி மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Exit mobile version