News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காற்று மாசுபாடு கருவில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கும்: ஆய்வில் தகவல்

Web Team by Web Team
October 11, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
காற்று மாசுபாடு கருவில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கும்: ஆய்வில் தகவல்
Share on FacebookShare on Twitter

காற்று மாசுபாடு கருவில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கின்றது என்பது மேலைநாடுகளில் நடந்த சமீபத்திய ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியக் குழந்தைகள் காற்று மாசினால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன என்பதை அறியும் ஆய்வுகள் டெல்லியில் நடந்து வருகின்றன.

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றின் மாசுபாடு சமீப காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியை காற்று மாசுபாடுகள் பாதிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கருவில் உள்ள குழந்தைக்கு சத்துகள் செல்லும் பாதையான தொப்புள் கொடியின் பாதையில் கார்பன் துகள்கள் அடைத்துக் கொள்வதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது என்பது உலகெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை காற்று மாசினால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவது குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனை ‘தப்னே’ எனப் பெயரிடப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வை ஓராண்டுக்கு முன்பு தொடங்கியது. இந்தியாவிலேயே காற்று மாசு மிக அதிகமாக உள்ள நகரமான டெல்லியில் வாழும் கருவுற்ற தாய்மார்களைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், அவர்களின் கருவில் உள்ள குழந்தைகளைக் காற்று மாசு எந்த அளவுக்கு பாதிக்கின்றது என்பதை அறிவதே இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறையும், எம்.ஆர்.சி. எனப்படும் இங்கிலாந்து அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனமும் இந்த ஆய்வுக்கு நிதி உதவியை வழங்குகின்றன.

இதற்காக 600 பெண்களிடம் ஆய்வுகள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 77 பெண்கள் ஆய்விற்கு ஒத்துழைக்க தங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் முதல்முறை பரிசோதனைக்கு வந்தது முதல் குழந்தை பிறந்து ஒன்றரை வயது ஆகும் வரை, இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி முதல் மூளை வளர்ச்சி வரையிலான அனைத்தும் இந்த ஆய்வில் கண்காணிக்கப்படும். இதில் பங்கேற்பதற்காக பதிவு செய்திருந்த 77 பெண்களில், 50 பேர் இதுவரை குழந்தைகளைப் பெற்று உள்ளனர். இந்த மொத்த ஆய்வுகளின் முடிவுகள் 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளன.

இந்த ஆய்வுகளின் முடிவை வைத்தே இந்தியாவில் கருவில் உள்ள குழந்தைகள் காற்று மாசுபாட்டினால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன என்பதை நாம் அறிய முடியும், குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்த வேறு வழிமுறைகளையும் நாம் ஆராய முடியும்.

Tags: காற்று மாசுபாடுகுழந்தைகள்
Previous Post

93 பேரை கொலை செய்த முன்னாள் குத்துச் சண்டை வீரர்

Next Post

இந்திய கிரிக். வாரிய தேர்தலில் பங்கேற்க 8 சங்கங்களுக்கு தடை

Related Posts

குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் – வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்ட குழந்தைகள்
TopNews

குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் – வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்ட குழந்தைகள்

July 1, 2021
சுட்டியானை சிறுவர் இதழ் நடத்தும் குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்!
TopNews

சுட்டியானை சிறுவர் இதழ் நடத்தும் குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்!

March 30, 2021
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45,000 குழந்தைகள் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்
TopNews

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45,000 குழந்தைகள் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்

September 17, 2020
காற்று மாசு: 2020 ஏப்ரல் முதல் பி.எஸ்.4 ரக வாகனங்களுக்கு தடை
TopNews

காற்று மாசு: 2020 ஏப்ரல் முதல் பி.எஸ்.4 ரக வாகனங்களுக்கு தடை

October 17, 2019
புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம்
செய்திகள்

புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம்

May 28, 2019
திருப்பத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறானாளிகள் கணக்கெடுக்கும் பணி
செய்திகள்

திருப்பத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறானாளிகள் கணக்கெடுக்கும் பணி

May 8, 2019
Next Post
இந்திய கிரிக். வாரிய தேர்தலில் பங்கேற்க 8 சங்கங்களுக்கு தடை

இந்திய கிரிக். வாரிய தேர்தலில் பங்கேற்க 8 சங்கங்களுக்கு தடை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version