லோக் ஆயுக்தா தலைவரை தேர்ந்தெடுக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

லோக் ஆயுக்தா தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான தேடுதல் குழு தேர்வு செய்த நபர்கள் குறித்த அறிக்கையை முதலமைச்சர் பழனிசமியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.

சபாநாயகர் தனபால் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேடுதல் குழு அளித்த அறிக்கையை விரைவில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

Exit mobile version