கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அதிமுக கிளைச் செயலாளரைத் தாக்கிய திமுகவினர் கொடிக் கம்பங்களையும் சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கே.பி.குளம் பகுதியில் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு வாக்கு சேகரிப்பதற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் வருகை தந்துள்ளார். அவரை வரவேற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை கே.பி. குளம் அதிமுக கிளைச் செயலாளர் செல்வராஜ் செய்துள்ளார்.
அப்போது குடிபோதையில் வந்த திமுகவினர் செல்வராஜை தாக்கியதுடன், ஒலிப் பெருக்கிகள் மற்றும் அதிமுக கொடிக்கம்பங்களையும் சேதப்படுத்தினர். மேலும் செல்வராஜின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் காயமடைந்த அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post