நடிகை பானுப்ரியா விவகாரம்: துன்புறுத்தப்பட்டாக கூறிய சிறுமியின் தயார் கைது

நடிகை பானுப்ரியா விவகாரத்தில், வீட்டுவேலை செய்த சிறுமி சந்தியாவை பார்க்க, கெல்லீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு வந்த அவரது தாயார் பிரபாவதியை, பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி சந்தியாவிடம், தங்க நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தொடர்பாக, விசாரிக்கப்பட்டதாகவும், பொருட்கள் அனைத்தும், தாய் பிரபாவதியிடம் கொடுத்தனுப்பியதாக சிறுமி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, பிரபாவதியை தொடர்பு கொண்ட பானுப்பிரியா தரப்பிடம், பொருட்களையும் பணத்தையும் தந்து விடுவதாக அவர் கூறியிருக்கிறார். இதனிடையே, ஆந்திர மாநில காவல் நிலையத்தில், தனது மகளை அடைத்து வைத்து சித்தரவரை செய்வதாக பிரபாவதி, புகார் கொடுத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுமி சந்தியாவை போலீசார் மீட்டு சென்னையில் உள்ள சிறார் இல்லத்தில் அனுமதித்திருந்தனர். பிரபாவதி மீது, பானுப்ரியா தரப்பு போலீசில் புகார் தெரிவித்திருந்த நிலையில், சென்னை வந்த பிரபாவதியை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version