காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு

காதலிக்க மறுத்ததால் ஆந்திரா அருகே கல்லூரி மாணவி மீது இளைஞர் ஆசிட் வீசியதால், பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாரங்கலில் உள்ள வாக்தேவி கல்லூரியில் கடைசி ஆண்டு படித்து வருகிறார் ரவளி. அதே கல்லூரியில் படிக்கும் அவினாஷ் என்பவர் ரவளியை காதலிப்பதாக பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு சம்மதிக்காத ரவளி மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவினாஷ், தனது கையில் வைத்திருந்த ஆசிட்டை மாணவி முகத்தில் வீசி அடித்துள்ளார். இதனால் உடல் கருகி படுகாயமடைந்த மாணவி ரவளியை அவ்வழியே வந்த சக மாணவ மாணவியர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவினாஷை அங்கிருந்த மாணவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version