களைக்கட்டிய காங்கேயம் இன மாடுகளின் விற்பனை சந்தை

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பாரம்பரிய சந்தையில், காங்கேயம் இன மாடுகளை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த பழையகோட்டை மாட்டுத்தாவணியில், பாரம்பரிய மாடுகளின் விற்பனை சந்தை அமைந்துள்ளது. இங்கு காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சிக் காளைகள், மயிலை மாடுகள், கிடாரிகள் ஆகிய காங்கேயம் இன மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இவைகளை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், பழையகோட்டை மாட்டுத்தாவணி சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் சந்தையில் வியாபாரம் சூடுபிடித்தது. வியாபாரிகள் காளைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

Exit mobile version