விமானத்தில் எலி, அணில், பல்லிகளை கடத்தி வந்த பயணி

பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பல்லி, எலி மற்றும் அணில்களை கடத்தி வந்தவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் போன்றவற்றை  பலர் கடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தாலும் சில நேரங்களில் பாதுகாப்பையும் மீறி அவர்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் 12 கங்காரு எலிகள், கனடா மற்றும் மெக்சிகோ பகுதியில் வாழும் 3 எலிகள்,1 சிவப்பு அணில் மற்றும் இகுவானா பல்லியை ஒருவர்  பாங்காக்கில் இருந்து கடத்தி வந்துள்ளார்.

இதனை அறிந்த சென்னை விமான நிலையத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து விலங்கு மற்றும் ஊர்வனங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட  அணில், பல்லி, எலிகள் மீண்டும் பாங்காக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version