News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

மதுரையில் எஜமானர்களை கொலையில் இருந்து காப்பாற்றி நாய்

Web Team by Web Team
August 15, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மதுரையில் எஜமானர்களை கொலையில் இருந்து  காப்பாற்றி  நாய்
Share on FacebookShare on Twitter

மதுரையில் அரிவாளால் தாக்கிய முகமூடி கும்பலிடம் இருந்து, எஜமானர்களை காப்பாற்றி, உயிர்துறந்த நாயின் செயல் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது…

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது,

இந்தநிலையில் அசோக்கின் நண்பர்கள் 8 பேர் முகமூடி அணிந்து கொண்டு ஆயுதங்களுடன் முத்துக்குமாரை தேடி அவர் வேலை பார்க்கும் அப்பள கம்பெனிக்கு சென்றனர்.

அங்கு கம்பெனி உரிமையாளர் செந்திலிடம் தாங்கள் தேடி வந்த நபரை கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது,

இதனால் அந்த கும்பல் ஆத்திரம் அடைந்து செந்திலை அரிவாளால் வெட்டியது. இந்த சத்தம் கேட்டு அவருடைய மனைவி அங்கு பதறியபடி ஓடி வந்து பார்த்தார். அப்போது அவரையும் அந்த கும்பல் அரிவாளால் தாக்கியது.

முகமூடி அணிந்து வந்த நபர்களால், தனது எஜமானர்களான செந்தில் மற்றும் அவருடைய மனைவி தாக்கப்படுவதை கண்டு, அவர்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய் ஓடிவந்து முகமூடி கொள்ளையர்களை மீது பாய்ந்து, தங்கள் எஜமானர்களை காப்பாற்ற முயன்றது.

ஆனால் ஈவு இரக்கமற்ற அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அந்த நாயை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் அந்த நாய் பரிதாபமாக செத்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்த செந்தில், அவருடைய மனைவி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய்(வயது 22), ஹரி (19), பிரவீன்பாலா(18), சிவா(19), ஜாகீர்உசேன்(19) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேரை கைது செய்தனர். தப்பிச் சென்ற விக்னேஷ் என்பவரை தேடி வருகிறார்கள்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, அதில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தங்கள் எஜமானர்களை முகமூடி கும்பலிடம் இருந்து காப்பாற்றிவிட்டு, கத்திக்குத்து காயத்துடன் உயிர்துறந்த நாயின் விசுவாசம் குறித்து அப்பகுதி மக்கள் பரிதாபத்துடன் தெரிவித்தனர்.

Tags: dogmadurainewsj
Previous Post

மூணாறு- உடுமலை இடையேயான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

Next Post

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version