News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நெற்களஞ்சியமாய் திகழ்ந்த இராமநாதபுரம்… தண்ணியில்லாக் காடானது எப்படி?

Web Team by Web Team
July 23, 2021
in TopNews, கட்டுரைகள், செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
நெற்களஞ்சியமாய் திகழ்ந்த இராமநாதபுரம்… தண்ணியில்லாக் காடானது எப்படி?
Share on FacebookShare on Twitter

தற்போது உள்ள அரசு ஆவணங்களில், ராமநாதபுரம் என்று குறிப்பிடப்படும் ஊர், 500 ஆண்டுகளுக்கு முன் முகவை என்றும் அழைக்கபட்டுள்ளது. ராமநாதபுரம் முகவை என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன..? தெரிந்த கொள்ளலாம்….

 

தண்ணியில்லாக்காடு, விவசாயம் விளையாத பூமி, வறட்சி மாவட்டம் என பொதுவாக அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம், ஒரு காலத்தில் நெற் களஞ்சியமாக இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம், அதுதான் வரலாறு. ராமாநாதபுரத்திற்கு முகவை என்ற இன்னொரு பெயரும் உண்டு.

முகவை என்ற சொல், சங்க இலக்கியங்களில் அள்ளுதல், நெற்பொலி உள்ளிட்ட பல பொருள்களில் குறிப்பிடப்படுகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் முகவைப்பாட்டு, நெல் கதிரடிக்கும் இடத்தில் பாடப்படும் பாட்டாகும்.

ராமநாதபுரத்தைச் சுற்றிலும் நெல்லை நினைவுபடுத்தும் சூரன் கோட்டை, சக்கரக் கோட்டை, மேலக்கோட்டை உள்ளிட்ட 72 ஊர்கள் இன்றும் சாட்சியாய் உள்ளன. தற்போதைய ராமநாதபுரம் நகரம், முற்காலத்தில், நெல் கதிரடிக்கும் மையமாக விளங்கியதால், முகவை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ராஜா கிழவன் சேதுபதி காலத்தில் இப்பகுதியில் தோண்டப்பட்ட ஊருணி ”முகவை ஊருணி” என்றே அழைக்கப்படுகிறது. கி.பி.1711-ம் ஆண்டு அவர் வழங்கிய செப்பேட்டில், ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் இருக்குமிடமும் ”முகவை” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி.1607-ல், திருமலை உடையான் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில், ராமநாதபுரம் எனும் ஊர் முதன் முதலில் குறிப்பிடப்படுகிறது. ராமநாதபுரம் நகரம் உருவாவதற்கு முன், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில், களத்தாவூர், அச்சுந்தன்வயல், சூரங்கோட்டை ஆகிய ஊர்கள் சிறப்புற்று இருந்துள்ளன. நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததாலேயே, ராமநாதபுரத்திற்கு முகவை என்ற பெயர் வழங்கப்பட்டதாக, தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறுகிறார்.

தண்ணியில்லாக்காடு என அழைக்கப்படும் ராமநாதபுரம், முற்காலத்தில் நெற் களஞ்சியமாக விளங்கியது என்னும் வரலாற்று உண்மை, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags: இராமநாதபுரம்முகவை
Previous Post

பொறுப்பின்றி செயல்படும் TANGEDCO… அரசு செய்ய வேண்டியது என்ன?

Next Post

அதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

Related Posts

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு – தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இருவர் கைது!
TopNews

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு – தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இருவர் கைது!

October 9, 2020
நீர்நிலைகளில் காணாமல் போனவர்களை மீட்க மிதவை சைக்கிள் – இரட்டையர்கள் கண்டுபிடிப்பு
தமிழ்நாடு

நீர்நிலைகளில் காணாமல் போனவர்களை மீட்க மிதவை சைக்கிள் – இரட்டையர்கள் கண்டுபிடிப்பு

October 6, 2020
விவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது – முதலமைச்சர் திட்டவட்டம்
TopNews

விவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது – முதலமைச்சர் திட்டவட்டம்

September 22, 2020
ஆன்லைன் விளையாட்டில் ரூ.90,000 இழந்த சிறுவன் – பெற்றோர் தந்த தண்டனை!
தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டில் ரூ.90,000 இழந்த சிறுவன் – பெற்றோர் தந்த தண்டனை!

September 18, 2020
Next Post
அதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

அதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version