ஏரிக்கரையில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஏரிக்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எரிந்து கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார்..?, எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Exit mobile version