6 வயது சிறுமியை சித்தி மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தது அம்பலம்

சென்னை தாம்பரம் அருகே மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சிறுமி பலியான சம்பவம் குறித்த விசாரணையில், சிறுமியை கொலை செய்தது அவரது சித்தி என தெரியவந்துள்ளது.

செம்பாக்கம் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபனின் 6 வயது மகள் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின் போது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரியவந்ததால், காவல்துறையினர் பார்த்திபனின் மனைவி சூரியகலாவிடம் விசாரணை மேற்கொண்டர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனது முதல் மனைவி இறந்ததால், சூரியகலாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திபன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சூரியகலாவிற்கு ஏற்கனவே 3 வயதில் குழந்தை இருந்த நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் பார்த்திபன் ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் கருவை கலைக்குமாறு கூறியதால் ஆத்திரமடைந்த சூரியகலா, பார்த்திபனின் முதல் மனைவிக்கு பிறந்த சிறுமியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். தன் மீது சந்தேகம் வராத வண்ணம் குழந்தையை காணவில்லை என அவர் நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Exit mobile version