News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பெரியாருக்காக கப்பலை நிறுத்தினாரா காமராஜர்? உண்மை என்ன?

Web Team by Web Team
July 15, 2021
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பெரியாருக்காக கப்பலை நிறுத்தினாரா காமராஜர்? உண்மை என்ன?
Share on FacebookShare on Twitter

பெரியாரை காமராஜர் மூலமாகவும், காமராஜரை பெரியார் மூலமாகவும் புரிந்து கொள்ள முயற்சித்தால் இருவரது மேன்மையயைும் பிழைகளையும் ஒருசேரப் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் காமராஜர் பெரியாருக்காக கப்பலையே நிறுத்தி வைத்திருந்த சம்பவம் வரலாற்றில் ஒருவர் மீது கொண்டிருந்த பெருமதிப்பை விளங்க வைப்பதற்காக சொல்லப்படுவதுண்டு. அனால், அது உண்மையா என்ற கேள்வியும் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. 

“ஆகட்டும் பார்க்கலாம்” என்ற நூலில் முன்னாள் அமைச்சர் க.இராசாராம் காமராஜர் குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல் இது.

1956ஆம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக இருந்த காலகட்டம்.  பெரியாருக்கு மலேசியா, -சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அழைப்பு வந்தது. சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழின் ஆசிரியர் கோ.சாரங்கபாணி அவர்கள் அய்யாவை அழைக்க ஏற்பாடு செய்து இருந்தார்கள். முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் என பயணம் செய்வதாக திட்டம்.

பெரியாருடன் அவரின் உறவினர்கள் ஆனைமலை நரசிம்மன், அவரது சகோதரி ராமகிருஷ்ணம்மாள், தவமணியம்மை, நான் ஆகிய 5 பேரும் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விசாவைப் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனிக்குப் போய் அய்ந்து பேருக்கும் டிக்கெட் எடுத்தோம். எஸ்.எஸ்.ரஜூலா என்கிற அந்த புகழ்பெற்ற கப்பல் கம்பெனிக்காரர்கள் டிக்கெட் கொடுக்கிற போதுதான் நீங்கள் 5 பேரும் பயணம் செய்ய வேண்டுமானால் மாநில அரசாங்கம் கொடுக்கும் நோ அப்செக்சன் சர்டிபிகேட் எடுக்க வேண்டும்! என்று சொன்னார்கள். இது என்னடா புதுக்கரடி? என்று நான் ஆடிப்போனேன். டிக்கெட் கைக்கு கிடைக்கும்போதே மாலை 6 மணி ஆகிவிட்டது.

மறுநாள் காலை 7 மணிக்கு கப்பலில் புறப்பட வேண்டும். இரவு ஒரே ஒரு பொழுதுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சான்றிதழில் சீல் பெற்றாக வேண்டும். கோட்டையில் எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். நாளை காலையில் கப்பலில் புறப்பட்ட மாதிரிதான் என்று கவலையோடு நான் பெரியாரின் வீட்டுக்கு வந்தேன். மணியம்மையும் கிருஷ்ணம்மாளும் பயணம் புறப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர்.

பெட்டி படுக்கைகள் கட்டி தயாராக வைக்கப்பட்டிருந்தன. இந்த பரபரப்பைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் படாமல் தந்தை பெரியார் எப்போதும்போல படித்துக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்!

நான் மிகவும் சோர்ந்துபோய் வருவதைக் கண்ட மணியம்மை விபரம் கேட்டார். நிலைமையை எடுத்துச் சொன்னேன். சற்று யோசித்த மணியம்மை, நீ உடனே முதலமைச்சர் காமராஜரை போய்ப் பார். அவரால் உடனே ஏற்பாடு செய்ய முடியும். அய்யாகிட்டே இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே. அவர் சத்தம் போடுவார். முதலைமைச்சருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாதென்பார் என்று சொன்னார்.

நான் இரவு 8 மணி அளவில் காமராஜரின் திருமலைப்பிள்ளை சாலை வீட்டுக்குப் போனேன். காமராஜரிடம் நடந்ததை சொன்னேன். காமராஜரோ, இதற்கு நீ ஏன் இவ்வளவு அலைஞ்சே? என்கிட்டே சொல்லி இருந்தால் பாஸ்போர்ட்லேருந்து மற்ற எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்து இருப்பேனே.. சரி நீ நாளைக்கு காலைல பத்து மணிக்கு வா. நான் சீல் போட்டு கொடுக்க சொல்றேன் என்றார். நான் தயங்கியபடி மெல்ல, கப்பல் காலை 7 மணிக்கு. ராத்திரிக்குள் சீல் போட்டு வாங்கினாத்தான் என்றேன்.

காமராஜர் உடனே, அட என்னப்பா நீ..? போகப்போறது பெரியார்! வேற யாரும் சாதாரண ஆளில்லை. கப்பலை நிக்கச்சொல்லி மத்தியானமா எடுக்கச் சொல்வோம்! போ போ.. காலைல வா! என்றார். இதெல்லாம் நடக்கிற காரியமா என எனக்கு மலைப்பாகத் தோன்றியது. நான் தயக்கத்தோடுதான் அவர் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த நிமிடமே முதலமைச்சர் காமராஜர் அங்கிருந்த உதவியாளர்களிடம் ரஜூலா கப்பல் சதக் தம்பி மரைக்காயருக்கு போனைப் போடு என்றார்.

தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கொடுத்தனர். இந்தாப்பா நாளைக்கு பெரியார் பர்மாவுக்கு போறாரு. அவருக்கு அரசாங்க அனுமதி 12 மணிக்குத்தான் கெடைக்கும். அவர் கப்பலுக்கு வந்து சேர 1 மணி ஆயிடும். நீங்க என்ன பண்றீங்க.. நாளைக்கு மட்டும் கப்பல் மதியம் ரெண்டு மணிக்கு எடுங்க. பயணிகளிடம் முன்கூட்டியே அறிவிச்சிடுங்க. மற்ற பயணிகளுக்கும் தொல்லை இருக்காதில்லையா.. ஞாபகம் இருக்கட்டும்.. போறது நம்ம பெரியார்.. புரியுதான்னேன் என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் பேசிவிட்டு வைத்தார். பின்னர் என்னைப் பார்த்து, என்னய்யா இப்போதாவது தைரியம் வந்துச்சா.. நீ பொறப்படுப்பா.. கவலையே படாதே.. கப்பலையே நிறுத்திப் புடுவோம்! என்றார்.

மறுநாள் காலையில் சொன்னதுபோலவே எல்லா இடத்திலும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார். எனக்கு ராஜ மரியாதையோடு வேலைகள் நடந்தன. பகல் 12 மணிக்கெல்லாம் நான் வெற்றியோடு வீடு திரும்பினேன். காமராஜர், இதை எல்லாம் பெரியார்கிட்ட போய்ச் சொல்லிகிட்டு இருக்காதே. அவருக்கு இதெல்லாம் கொஞ்சம்கூட பிடிக்காது.. என்ன புரியுதான்னேன் என்றார்.

அதிகாரமோ பதவியோ ஏதுமில்லாத ஒரு சாதாரண மனிதனுக்காக கடலில் கப்பல் காத்துக் கிடந்தது. நாங்கள், தலைவர் காமராஜரின் பெருந்தன்மையை நினைத்துப் பூரித்தபடி பயணம் கிளம்பினோம்.

 

ஆகட்டும் பார்க்கலாம் என்ற நூலில் முன்னாள் அமைச்சர் க.இராசாராம் காமராஜர் குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல் இது.

Previous Post

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

Next Post

பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? – உச்சநீதிமன்றம் கேள்வி

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? – உச்சநீதிமன்றம் கேள்வி

பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? - உச்சநீதிமன்றம் கேள்வி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version