News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

`சமூகம் என்ன சொல்லும் என அவள் பயந்தாள்!’ – விஸ்மயா கொலை குறித்து தாய் பரபரப்பு பேட்டி

Web Team by Web Team
June 25, 2021
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
`சமூகம் என்ன சொல்லும் என அவள் பயந்தாள்!’ – விஸ்மயா கொலை குறித்து தாய் பரபரப்பு பேட்டி
Share on FacebookShare on Twitter

 கேரளாவில் விஸ்மயா என்ற மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார் அவரது தாய்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22வயதான விஸ்மயா மருத்துவம் பயின்று வந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, கிரண் குமார் என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி 100 சவரன் நகை, ஒரு கார், ஒரு ஏக்கர் நிலத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர் விஸ்யமயாவின் பெற்றோர். இந்நிலையில், மேலும் வரதட்சணை கொடுக்க வலியுறுத்தி கிரண்குமார், விஸ்மயாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தலைமுடியை பிடித்து முகத்தில் அடிப்பது, கைகளில் ஆணியைக்கொண்டு சிராய்ப்பது, என பல்வேறு கொடுமைகளை அனுபவித்தவர், ஒரு கட்டத்துக்கு மேல் இந்த கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தங்களது மகளை பார்த்து 3 மாதங்களாகிவிட்டது என்கின்றனர் அவரது பெற்றோர். கடைசியாக தேர்வெழுத கல்லூரிக்கு சென்ற மகளை, கொல்லத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் கணவன் கிரண் குமார். இந்நிலையில், ஜூன் 21ம் தேதி காலை விஸ்மயா குடும்பத்தினருக்கு போன்கால் வந்துள்ளது. அதில், `உங்கள் மகளின் உடல்நிலை மோசமாக உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூற, உடனே பதறியடித்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோருக்கு, `மகள் இறந்துவிட்டாள்’ என்ற செய்தி வந்து சேர்ந்தது. அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

“என் மகளின் திருமணத்தையொட்டி, 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், டோயோட்டா கார் ஒன்றையும் வாங்கி கொடுத்தேன். இவ்வளவு செய்தும், நான் வாங்கி கொடுத்த காரின் மயிலேஜ் சரியில்லை என்று கூறி அதற்கு பதிலாக 10லட்சம் பணத்தை கேட்டு மகளை கொடுமைபடுத்தியுள்ளான் கிரண் குமார். சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கண்முன்னே எங்கள் மகளை அடித்தான்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் விஸ்மயாவின் தந்தை.

தாய் சஜிதா பேசுகையில், “என் மகளை அவரது கணவன் அடிக்கடி அடித்து துன்புறுத்தியிருக்கிறான். கடந்தவாரம் கூட, விஸ்மயா தனது முகத்தில் அடிப்பட்ட காயத்தை போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார். ஜீன் 20ம் தேதி என்னை தொடர்பு கொண்டு, தேர்வு கட்டணம் செலுத்த 5,500 பணம் வேண்டும் என்று கேட்டாள். `என்னிடம் பணமில்லை, உன் கணவரிடம் கேள்’ என்றேன். `பணம் கேட்டால், தனது கணவர் கத்துகிறார்’ என வேதனையுடன் தெரிவித்தாள் விஸ்மயா. அவள் பாத்ரூமிலிருந்துகொண்டு எனக்கு போன் செய்திருந்தாள். அதுமட்டுமில்லாமல், கணவன் கிரண் கடுமையாக முகத்தில் அடித்ததில், வாய் உடைந்து ரத்தம் வழிந்ததாகவும் அவள் கூறினாள். இங்கே நமது வீட்டுக்கு வந்துவிடு என்று அவளிடம் கூறினேன். அதற்கு அப்படி வந்துவிட்டாள் இந்த சமூகம் என்னைப்பற்றி தரக்குறைவாக பேசுமே என்று கூறிவிட்டு எல்லாவற்றையும் அவள்தாங்கிக்கொண்டாள்” என்று வேதனையுடன் கூறுகிறார் அந்த தாய்.

Tags: newsjvismayaவரதட்சணைவிஸ்மயா
Previous Post

உடலில் காயம்; 100பவுன் தங்கம் போதவில்லை – வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்

Next Post

கிஷோர்.கே.சுவாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
கிஷோர்.கே.சுவாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிஷோர்.கே.சுவாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version