News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

ஆட்சியில் இல்லாத போதே திமுக அட்டூழியம் – எடப்பாடி பழனிசாமி!

Web Team by Web Team
February 7, 2021
in Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆட்சியில் இல்லாத போதே திமுக அட்டூழியம் – எடப்பாடி பழனிசாமி!
Share on FacebookShare on Twitter

தான் செய்வதையே, போகும் இடமெல்லாம் ஸ்டாலின் சொல்லி வருவதாக விமர்சித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திட்டங்களை செயல்படுத்தி விட்டு தேர்தல் களத்துக்கு வரும் ஒரே கட்சி அதிமுக என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். மக்களுக்கான நலத்திட்டங்களை செய்வதாக வார்த்தைகளால் சொல்லிக்கொள்ளும் திமுக அதை ஒருபோதும் செயல்படுத்தியது இல்லை என்று விமர்சித்தார்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபடும் திமுகவிற்கு, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

பின்னர், அம்பத்தூரில் மகளிர் குழுவினர் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா பெண்களுக்காக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார். பெண்கள் தொழில் தொடங்க 81 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

மேடைக்கு மேடை, பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெறும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால்தான் நிவர்த்தி செய்வேன் என வெளிப்படையாகவே ஏமாற்றுவதாக சாட்டினார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பெற்ற மனுக்களின் மீது ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.

முன்னதாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

முதலமைச்சரின் உதிவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாகவும், குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், செல்போன் மூலம் 1100 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கட்சி பேதமின்றி, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அதிமுக அரசு விவசாகளின் நலனுக்காக ஏராளமான நன்மைகள் செய்து வருவதாக முதலமைச்சர் கூறினார். தமிழக வரலாற்றிலேயே வறட்சிக் காலத்தில் நிவாரணம் கொடுத்த ஒரே கட்சி அதிமுக என்றும் பெருமிதம் தெரிவித்தார். விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்து, பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இதனை ஸ்டாலின் உணரவேண்டும் என தெரிவித்தார்.

நெசவாளர்களுக்கு தொடர்ந்து பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

Tags: CM Edappadi K. PalaniswaminewsjNewsUpdatetamil nadu
Previous Post

உத்தரகாண்டில் பனிப்பாறை வெடித்தது – 150க்கும் மேற்பட்டோர் மாயம்!

Next Post

அனைத்துக் கல்லூரிகளும் இன்று முதல் மீண்டும் திறப்பு!

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
அனைத்துக் கல்லூரிகளும் இன்று முதல் மீண்டும் திறப்பு!

அனைத்துக் கல்லூரிகளும் இன்று முதல் மீண்டும் திறப்பு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version