கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இத்தாலியில் சிக்கியிருந்த 263 இந்திய மாணவர்கள் தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தனர். சீனாவை தொடர்ந்து இத்தாலியில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இத்தாலியில் சிக்கித்தவித்த 263 இந்திய மாணவர்கள், மத்திய அரசு உடனடியாக தங்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதனை அடுத்து ரோம் நகரில் இருந்து ஏர் இந்தியா தனி விமானத்தில் மாணவர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். பரிசோதனை நிறைவடைந்ததை தொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post