News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்கு உயர்த்தியவர் முதலமைச்சர் பழனிசாமி

Web Team by Web Team
February 13, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்கு உயர்த்தியவர் முதலமைச்சர் பழனிசாமி
Share on FacebookShare on Twitter

காவிரி படுகையில் சிறப்பு வேளாண் மண்டலத்தை பற்றி மு.க.ஸ்டாலின் செய்து வரும் கோயபல்ஸ் பொய் பிரசாரத்திற்கும், முதலமைச்சரை தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகமற்ற முறையில் பேசியதற்கும் அம்மா பேரவை சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏழரை கோடி மக்களை கொண்ட தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்கு உயர்த்தி நல்லாட்சி நடைபெறும் நாடு அன்னை தமிழ்நாடு என இந்திய தேசமே பாராட்டும் நிலையை உருவாக்கியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு, தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சென்று, மக்களின் கோரிக்கையை நிலுவையில் வைக்காமல் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியவர் முதலமைச்சர் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாமல், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உளறி வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்க சட்ட வல்லுநர்கள் மூலம் தனி சட்டத்தை உருவாக்கி முதலமைச்சர் சாதித்து காட்டுவார் என கூறியுள்ளார்.

கருணாநிதியின் மகன் என்ற ஒற்றை தகுதியை மட்டும் வைத்து கொண்டு தமிழினத்திற்கு தலைவராக வேண்டும் என்ற பேராசை வெறியோடு, பதவி பசியோடு, நாற்காலிக்காக அலைந்து திரிகிற மனிதராக ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

நல்லதை பாராட்ட மனமில்லாமல் போனாலும், அவதூறு செய்கின்ற, பழி சுமத்துகின்ற குணத்தையாவது ஸ்டாலின் மாற்றி கொண்டால் மட்டுமே தமிழக மக்கள் ஸ்டாலினை மனிதராக ஏற்றுகொள்வர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் மீது அக்கறையோ, தமிழகத்தின் வளர்ச்சிக்கான முயற்சியோ ஸ்டாலினிடம் இல்லை என்பதையே அவரது பொய் பிரச்சாரம் எடுத்து காட்டுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளதுடன், ஸ்டாலினுக்கு எதிராக அம்மா பேரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

Tags: CMedapaddi palanisamyminsiterRB Uthayakumar
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா

Next Post

குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக அறிவித்தது ஏன் ?

Related Posts

"மக்களை வென்ற மன்னாதி மன்னன்"-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள்
Top10

"மக்களை வென்ற மன்னாதி மன்னன்"-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள்

January 17, 2022
ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின் போதும் சர்ச்சையில் சிக்கும் ஸ்டாலின்
Top10

ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின் போதும் சர்ச்சையில் சிக்கும் ஸ்டாலின்

January 8, 2022
கண்ணீர் மல்க ராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா
TopNews

கண்ணீர் மல்க ராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா

July 26, 2021
2ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதல்வர்
TopNews

2ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதல்வர்

April 9, 2021
டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
Top10

டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

March 29, 2021
சிறுவயதில் சிகிச்சைக்கு கஷ்டப்பட்டேன் – அந்த அனுபவத்தால் தான் இப்போது அம்மா மினி கிளினிக் திட்டம்
TopNews

சிறுவயதில் சிகிச்சைக்கு கஷ்டப்பட்டேன் – அந்த அனுபவத்தால் தான் இப்போது அம்மா மினி கிளினிக் திட்டம்

December 19, 2020
Next Post
குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக அறிவித்தது ஏன் ?

குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக அறிவித்தது ஏன் ?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version