News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பயங்கரவாத செயல்களை ஒடுக்க மத்திய அரசு புது முயற்சி

Web Team by Web Team
November 25, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பயங்கரவாத செயல்களை ஒடுக்க மத்திய அரசு புது முயற்சி
Share on FacebookShare on Twitter

ஜம்மு காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் அராஜகத்தைக் கட்டுப்படுத்த புதிய படைப்பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது.

தரைப்படை, கப்பற் படை, விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய சிறப்பு பிரிவை சேர்ந்த வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு வன்முறை பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால் அங்கு வன்முறை சம்பவங்களும் பயங்கரவாத தாக்குதல்களும் பெருமளவு குறைந்துள்ளன. எனினும் அனைத்து பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை கடத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப் படை வீரர்களை கொண்ட சிறப்பு படைப் பிரிவு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு நடவடிக்கைக்கான ஆயுதப்படை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படையில், மார்கோஸ் எனப்படும் கப்பற்படை காமாண்டோக்கள், கருடா என அழைக்கப்படும் விமானப்படை வீரர்கள், தரைப்படை வீரர்கள் இந்த சிறப்பு பிரிவில் இடம்பெற்றுள்ளனர். காஷ்மீரில் வன்முறைக்குப் பெயர்போன உலார் ஏரிப் பகுதியில் விமானப்படை வீரர்களும் கருடா பிரிவைச் சேர்ந்த வீரர்கள் லோலாப் மற்றும் ஹாஜின் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் வயிற்றில் கிலி ஏற்படுத்தும் வகையில் அதிநவீன ஆயுதங்கள், சிறப்பு பயிற்சி, கண்காணிப்பு கருவிகளுடன் சிறப்பு படை களமிறக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி அசோக் திங்ரா தலைமையில் செயல்பட்டு வரும் இந்த சிறப்பு பிரிவு பயங்கரவாத சம்பவங்களை சிறப்பான முறையில் கையாண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Central GovernmentnewsjTerrorist Actions Condensation
Previous Post

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

Next Post

ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை

ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version