மனைவியின் பிறந்தநாளை கொண்டாட சென்ற இடத்தில் 4 சுறாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரீயூனியன் தீவின் அருகில் உள்ளது எடின்பர்க். அங்கு சேர்ந்தவர் ரிச்சர்ட் மார்ட்டின் டர்னர். இவருக்கு 44 வயது ஆகிறது. தன்னுடைய மனைவியின் பிறந்ததினத்தில் ஏதாவது சர்ப்ரைஸ் ஒன்றை குடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதன் படி உயர்ரக ரீயூனியன் தீவுகளில் கொண்டாட முடிவு செய்தார்.
அதன்படி தன்னுடைய மனைவியின் பிறந்த தினத்தின்று எங்கு செல்கிறோம் என்று சொல்லாமல் உயர்ரக ரீயூனியன் தீவுகளுக்கு அழைத்து சென்று ஆச்சிரியத்தையும் அளித்தார். அந்த இடத்தில் பீச் ஒன்று உள்ளது. அங்கு வைத்து தான் பிறந்த நாள் கொண்டாட நினைத்தார். அதன் படி மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தவர். அந்த சந்தோஷத்தில் இரண்டு பேரும் நீச்சலடித்து விளையாடி கொண்டிருந்தனர்.
எதிர்பாராத நேரத்தில் அங்கு வந்த 4 சுறாக்கள், ‘எடின்பர்க்’ நீச்சலடித்து விளையாடி கொண்டிருந்தவர் மீது சூழ்ந்துக் கொண்டு அவரை உணவாக்கியது. இதை நேரில் பார்த்த அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று உள்ளார்.
பின்பு இதை பற்றி அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். அதில், “4 சுறாக்களில் ஒன்று 13 அடி நீளத்தில் இருந்தது. அந்த 13 அடி நீள டைகர் சுறாவின் வயிற்றில் ரிச்சர்ட்டின் முழங்கை உள்ளிட்ட சில பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவரது விரலில் போட்டிருந்த அவர்களது திருமண மோதிரத்தின் உதவியுடன் அவரது மனைவி அவரது இறப்பை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், அவரது உடலின் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளது.” என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மனைவியின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட இந்த தீவிற்கு சென்ற ரிச்சர்ட், சுறாக்களுக்கு இரையானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post