49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான வன்முறை சம்பவங்களை கண்டித்தும், திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, நடிகர் அனுராக் காஷ்யாப், உள்பட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து, பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர், பீகார் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் 49 பிரபலங்கள் மீதான வழக்கை திரும்ப பெற உள்ளதாகவும், புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post