News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

குடிக்க பணம் தராத 105 வயது பாட்டியை, கொலை செய்த பேரன்

Web Team by Web Team
September 24, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
குடிக்க பணம் தராத 105 வயது பாட்டியை, கொலை செய்த பேரன்
Share on FacebookShare on Twitter

மது குடிக்க பணம் தராததால், சொந்தப் பேரனே 105 வயது பாட்டியைக் அரிவாளால் வெட்டி கொலை செய்த கொடூரம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி ஊரைச் சுற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலமுருகன் நேற்று தனது பெற்றோரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பாலமுருகனின் பெற்றோர் பணம் தரமுடியாது எனக் கூறியதுடன் அவரை திட்டியுள்ளனர்.

பெற்றோர் பணம் தராத ஆத்திரத்தில் பாலமுருகன் அவர்களுடன் சண்டையிட்டு தனது 105 வயது பாட்டி கருப்பாயியிடம் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால் பாட்டி கருப்பாயி நீ குடிப்பதற்குத் தான் பணம் கேட்பாய் உனக்கு பணம் தரமுடியாது ஒழுங்காக வேலைக்கு செல்… என கூறி பணம் தர மறுத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பாலமுருகன் அருகிலிருந்த அரிவாள்மனையை எடுத்து பாட்டியின் கழுத்து மற்றும் தலை பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு, கருப்பாயி காதில் அணிந்திருந்த தோடை காதோடு அறுத்து எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதே இடத்தில் அமைதியாக அமர்ந்துள்ளார்.

பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் கருப்பாயி கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மல்லாங்கிணறு காவல்துறையினர் கருப்பாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்துவிட்டு எதுவும் நடக்காதது போல் பாட்டியின் உடலின் அருகே அமைதியாக அமர்ந்திருந்த இருந்த பேரன் பாலமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர். சொந்தப்பேரனே பாட்டியைக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags: பாட்டி கொலைபேரன் கைது
Previous Post

உதவி பேராசிரியரை கொலை செய்த வழக்கில் அரசு ஆய்வக உதவியாளர் கைது

Next Post

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ராவுக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்ப்பு

Related Posts

No Content Available
Next Post
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ராவுக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்ப்பு

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ராவுக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்ப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version