News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

சிலை கடத்தல் – சிபிஐக்கு கேள்வி

Web Team by Web Team
September 11, 2018
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சிலை கடத்தல் – சிபிஐக்கு கேள்வி
Share on FacebookShare on Twitter

தமிழகக் கோவில்களில் சிலைகள் திருட்டுப் போனது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இது அரசின் கொள்கை முடிவு என்றும், போலீஸ் விசாரணையில் இருக்கும் வழக்குகளையும், புதிய வழக்குகளையுமே சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் தமிழக அரசு கூறியது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை, மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டதாகவும், அவை அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ. இணை இயக்குநர் அலுவலகத்துக்கு தமிழக அரசு அனுப்பியதாகவும், அவை டெல்லி சி.பி.ஐ. இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்த நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டனர். வழக்கு மாற்றம் குறித்த ஆவணங்களை தமிழக அரசும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மறுத்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், சிலை கடத்தல் சம்பவத்தில், தமிழகத்தின் எல்லை தாண்டி மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர்கள் தொடர்பு இருப்பதால், தமிழக போலீசார் விசாரிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: சிபிஐக்கு கேள்விசிலை கடத்தல்சென்னை உயர்நீதிமன்றம்
Previous Post

வாக்குப்பதிவு எந்திரங்களில் சோதனை

Next Post

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Related Posts

அமைச்சர்னா என்ன?  சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது:  மாஸ் காட்டும் நீதிமன்றம்
TopNews

அமைச்சர்னா என்ன? சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது: மாஸ் காட்டும் நீதிமன்றம்

July 27, 2021
மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
TopNews

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

July 23, 2021
செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி…  தவறுதலா? தனிநபர் வன்மமா?
TopNews

செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி… தவறுதலா? தனிநபர் வன்மமா?

July 7, 2021
இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
TopNews

இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

July 5, 2021
ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
TopNews

ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

June 9, 2021
திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
TopNews

திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

May 24, 2021
Next Post
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version