News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

என் மாவட்டத்தை காப்பதும் என் பணிதான்: ஜவான்ஸ் அமைப்பு

Web Team by Web Team
July 25, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
என் மாவட்டத்தை காப்பதும் என் பணிதான்: ஜவான்ஸ் அமைப்பு
Share on FacebookShare on Twitter

என் பணி, நாட்டை காப்பது மட்டும் அல்ல நாட்டை காக்க என்னை உருவாக்கிய என் மாவட்டத்தை காப்பதும் என் பணிதான் என்று கூறும் கன்னியாகுமரி மாவட்ட ஜவான்ஸ் குறித்த செய்தி தொகுப்பை காணலாம்…

கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பு மூலம் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சமூக பணிகளுக்கு அரசு தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. என் தேசம் என் பணி என கூறும் கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு,.. இயற்கை, விவசாயம், ஆன்மீகம் என பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் தேசத்தை காக்கும் ராணுவ வீரர்களை உருவாக்குவதில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. தற்போது குமரியில் இருந்து மூன்றாயிரத்து 800 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் எல்லையில் பணியாற்றி வருகின்றனர்.

தேர்வு செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் தேசத்தில் எல்லையை பாதுகாத்து வரும் நிலையில், சுழற்சி முறையில் விடுமுறையில் வரும் ராணுவ வீரர்கள் மாவட்டத்தை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குமரிமாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தொடக்கத்தில் 230 ராணுவ வீரர்களை கொண்ட இந்த அமைப்பில் தற்போது மூன்றாயிரத்து 700 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஒரு வாட்ஸ்அப் குரூப் மூலம் விடுமுறையில் வரும் வீரர்களை ஒன்றிணைத்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விடுமுறையில் வரும் வீரர்களை கொண்டு நாள் முழுவதும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொள்வது இந்த அமைப்பின் பணியாக உள்ளது.

சுகாதாரம் மிக்க குமரி என்பது இந்த அமைப்பின் நோக்கம், சாலையை சீரமைத்தல், சுகாதாரம் ஏற்படுத்துதல், தண்ணீர் வசதி, இலவச மருத்துவம், இலவச கல்வி என நீண்டு கொண்டே செல்கிறது, இவர்களின் சமூக பணி. தங்களது ஊதியத்தில் ஒரு பகுதியை இந்த பணிகளுக்காக ஒதுக்கி விடுகின்றனர். இவர்களின் சமூக பணி தற்போது மக்கள் மத்தியில் எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பகுதிகயிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும் போது அப்பகுதியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற ராணுவ வீரர்களின் பணிகள் தனி சிறப்பாக அமைகிறது. இது மட்டுமின்றி ஆபத்து காலங்களில் காவல்துறை, மீட்பு பணி துறையினருடன் சேர்ந்து பணியாற்றுவது, களப்பணியில் ஈடுபடுவது போன்ற முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது குமரியில் தொடங்கி உள்ள இந்த விழிப்புணர்வு பணி, தேசம் முழுவதும் ஏற்பட்டால், நிச்சயம் வளமான, சுகாதாரமான இந்தியா உருவாகும் என கூறும் அவர்கள், தாங்களும் ராணுவ வீரர்களுடன் இணைந்து சேவை செய்வோம் என்றும் தெரிவிக்கின்றனர்.

Tags: ராணுவ வீரர்கள்ஜவான்ஸ் அமைப்பு
Previous Post

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது

Next Post

கடப்பாவில் நிலத்தை தோண்டிய போது 54 நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்ததால் அதிர்ச்சி

Related Posts

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!
TopNews

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

November 22, 2020
சிறைப்பிடிக்கப்படும் ராணுவ வீரர்களை நடத்தும் முறை குறித்து ஜெனிவா ஒப்பந்தம் சொல்வது என்ன?
TopNews

சிறைப்பிடிக்கப்படும் ராணுவ வீரர்களை நடத்தும் முறை குறித்து ஜெனிவா ஒப்பந்தம் சொல்வது என்ன?

February 28, 2019
பாதுகாப்பு கேட்டு ராணுவ வீரர் கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு
செய்திகள்

பாதுகாப்பு கேட்டு ராணுவ வீரர் கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு

February 12, 2019
காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில் 140 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : மத்திய அரசு
TopNews

காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில் 140 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : மத்திய அரசு

January 2, 2019
குன்னூரில் பயிற்சி வகுப்பு முடித்து சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்ட இளம் ராணுவ வீரர்கள்
செய்திகள்

குன்னூரில் பயிற்சி வகுப்பு முடித்து சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்ட இளம் ராணுவ வீரர்கள்

December 22, 2018
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு
TopNews

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு

August 17, 2018
Next Post
கடப்பாவில் நிலத்தை தோண்டிய போது 54 நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்ததால் அதிர்ச்சி

கடப்பாவில் நிலத்தை தோண்டிய போது 54 நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்ததால் அதிர்ச்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version