மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் 5 பெண்களிடம் 38 சவரன் நகைகள் பறித்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனைக்காண ஆயிரக்கணக்கானா பக்தர்கள் அங்கு திரண்டதால் கூட்டநெரிசலில் ஏற்பட்டது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் இந்திரா, ஜானகி, சாந்தாமணி, பாண்டியம்மாள், அன்னலட்சுமி ஆகிய 5 பேரிடம் இருந்து சுமார் 38 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து தல்லாக்குளம் வடக்கு காவல் நிலையத்தில் சம்பந்தபட்டவர்கள் கொடுத்தப் புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.
Discussion about this post