சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் V.P. கந்தசாமி முதலமைச்சரை, அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P. வேலுமணி உடன் இருந்தார். அதே போன்று, ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பெ.மோகனும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பின் போது, உணவுத்துறை அமைச்சர் R.காமராஜ் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் உடன் இருந்தனர்.
Discussion about this post